60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்
                  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.
புரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.
                        பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.
புரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.
ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்
                  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
                        இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.
மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்
                  சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்
பிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.
கிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.
எனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.
அந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
                        கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்
பிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.
கிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.
எனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.
அந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக அறிக்கை இல்லை
                  முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் அளிக்காமல் உள்ளது. இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டுள்ள அப்பல்லோ கடந்த 6 நாட்களாக அறிக்கை எதையும் வெளியிடாமல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது முதல் அவ்வப்போது அப்பல்லோவிலிருந்து அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதுவரை 10 அறிக்கைகள் வந்துள்ளன. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே மிக விரிவான அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வரவில்லை. கடைசியாக 10ம் தேதிதான் அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.
செப்டம்பர் 22ல் அனுமதி செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.
23ம் தேதி முதல் அறிக்கை அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.
                        செப்டம்பர் 22ல் அனுமதி செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பானது. முதல்வர் உடல் நலனுக்கு என்ன என்ற பெரும் கவலை அதிமுகவினர் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியலும் நிலவியது.
23ம் தேதி முதல் அறிக்கை அடுத்த நாள் அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மூலம் சாதாரண காய்ச்சல் காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நினைத்தனர்.
பனீர்ச்செல்வம் பதில்முதல்வர்
                  முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார். 
ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார்.
ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
                        ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார்.
ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
			
                    
                    
                    
                    
                    