Super User Written by  Jun 06, 2017 - 9985 Views

சாதிக்கொடுமை, பெண்ணொருவர் எரித்துக்கொலை

கர்நாடகா விஜயபுரா மாவட்டத்தில் உள்ள குண்டகன்னலா என்ற கிராமத்தில் வசித்துவந்த 24 வயதான சயபன்னா ஷரனப்பா கொன்னுர், மீது பானு பேகம் காதல் கொண்டிருந்தார்.
இருவரின் காதல் பற்றி தெரிந்துகொண்ட பானுவின் பெற்றோர் தங்களது மகள் வயது குறைவானவள் என்றும் சயபன்னா தங்களது மகளை மயக்கியுள்ளதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையின் உதவியை நாடினர்.
கடந்த ஜனவரி 24ம் தேதி சயபன்னா-பானு ஜோடி ஊரைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், பானுவின் பெற்றோரிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுவந்திருப்பதாகக் கூறி, பானு கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் பானுவின் பெற்றோர் இதை வரவேற்கவில்லை. மாறாக, பானுவின் தந்தை இந்த உறவை முடித்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…