ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்

கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை,முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவி யேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல.

ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 9ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார்.

ஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த விடயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

எனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது” - என்றார்.

மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்

சிங்கள காவல்துறையினரால் யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட‌ விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சவை முடிவுகளை அறிவித்ததன் பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. கேள்விநேரத்தின் போது, யாழ்ப்பாணத்தில், துப்பாக்கிச்சூட்டில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பிலும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றிருக்கவேண்டிய நிலையில், கடமையிலிருந்த சாதாரண பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பில், தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளை தெளிவுபடுத்திய அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஒரு சந்தர்ப்பத்தில், இந்த விவகாரம் தொடர்பில் தான், பூரண தெளிவின்றியே இவ்விடத்துக்கு வந்துவிட்டதாகவும் கூறிவிட்டார். எனினும், ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்டுத் துருவியெடுத்துவிட்டனர்.

நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மூன்று கேள்விகளுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்று, அமைச்சர் சாகல கூறியிருந்த போதிலும், ஊடகவியலாளர்கள் விடுவதாய் இல்லை.

கேள்வி நேரத்துக்கு முன்னதாக, சம்பவத்தை தெளிவுபடுத்திக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க,
யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில், கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ்ப்பாண சிவில் சமூகம், எம்.பி.க்கள் பலர், பொதுமக்கள் எனப் பலரும், நிலைமையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தனர்.

“அதற்கான சகல தரப்பினருக்கு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில், பெரும் குழப்பமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கக்கூடும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினர், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்திவரும் நிலையில், அந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பொலிஸார், அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றும், இவ்வாறானதொரு உஷார் நிலையிலேயே பொலிஸார் இருந்தனர். அப்போது, வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். இரண்டு தடவைகள் சமிக்ஞை செய்துள்ளனர். அவ்விருதடவைகளையும் மீறி, மேற்படி மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதையடுத்தே, பொலிஸாரினால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்துள்ளது என்று விளக்கமளித்தார்.

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், இந்தச் சம்பவம் தொடர்பிலான உங்களது அர்த்தப்படுத்தலுக்கு அமைய, அது எந்த வகையில் இன ஒற்றுமைக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கக்கூடும் என்று அமைச்சரிடம் வினவினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாகல, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இரு தமிழ் மாணவர்களின் உயிரிழப்பு என்பவற்றை, சம்பவத்தின் பாரதூரமான விடயங்களாக சுட்டிக்காட்டியதுடன், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி, சிலர் தூண்டுதல்களில் ஈடுபடுவதற்குக் காத்திருந்திருக்கலாம் என்றார்.

எவ்வாறிருப்பினும், யாழ். குடாநாட்டில் குற்றங்களில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருப்பதாக தமிழ் மக்களால் தெரிவிக்கப்படுகிறதே என்றும் வினவினர்.
இக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தார் அமைச்சர். எனினும், கேள்வி கேட்ட ஊடகவியலாளர் விடவில்லை.

“நீங்கள் அமைதியாகச் செல்வதை, நான் ஆம் என்ற பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?” என மீண்டும் வினவினார், கேள்வியை எழுப்பிய அந்த ஊடகவியலாளர். அப்போது கதவுக்கு அருகில் சென்றுவிட்ட அமைச்சர் சாகல, “இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

எனினும், கோப் குழு தொடர்பில், ஊடகவியலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையில், அதற்கு பின்னர் கடும் வாக்குவாதங்களும் தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றன.

ஒரு கணத்தில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ, மருமகன் தவறிழைத்திருக்கின்றார் என்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் தவறிழைத்தார் என்று அர்த்தப்படாது. அதேபோல, முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் தவறிழைத்தார் என்பதற்கான முன்னாள் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் என்று அர்த்தப்படாது என்று சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மோசடி! அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

படையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.

முன்னாள் சிங்கள இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் மஹிந்த மைத்திரி ஆகியோரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படவுள்ளது.

இந்த தளபதிகள் மீது பெருமளவான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தபோதும் அவற்றை புறந்தள்ளிவிட்டு நிதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோர் இவ்வாறு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடல், எவன்கார்ட் நிறுவனத்துக்கு உதவுதல், 5 மாணவர்களுடைய காணாமல் போதல், இராணுவ படையின் நலன்புரி விடயங்களுக்கு டெலிகொம் நிறுவனத்திடம் 50 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த ஒரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு பிரதா னிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான டொலெக்ஸ் சுவிஸ் கைக்கடிகாரம் ஒன்றை வழங்கியுள்ளமை தொடர்பிலான தகவலும் வெளியாகியுள்ளது.

குறித்த பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிராக பாதுகாப்புத் துறை அதிகாரி இரகசியப் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்பு பிரதானியொருவர் காண ப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வாக்கு மூலம் பெறப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானி தொடர்பில், சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.

இதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.

எனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை

தமிழர் பிரச்சினையை இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றவே கயில் எடுத்தனரே தவிர தீர்வொன்றைப் பெறுவதற்காக பயன்படுத்தவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த தலைவர்கள் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை வழங்காததினால் தான் 30 வருடகால யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி – விகாரமஹாதேவி கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று அந்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இனங்களுக்கு இடையே சுதந்திரமான வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்கும் எனவும் கூறினார்.

“நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்து ள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை சரிவர முகாமைசெய்யாமையே நாங்கள் இழைத்த பெருந்தவறாகும். மலே சியாவில் அந்நாட்டுப் பிரஜைகள் 49 வீதமானவர்களே உள்ளனர். 51 வீதமானவர்கள் சீன நாட்டவர்கள். ஆனாலும் அந்த நாட்டில் பாரியதொரு சிவில் யுத்தம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு, அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக்கொடுக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பொன்றும் உருவாக்க ப்பட்டது.

சிங்கப்பூரும் அப்படித்தான். சுதந்திரம் கிடைத்து ஓரிரு வருடங்கள் கழிந்தபோது இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டது.துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அது தீர்க்கப்படவில்லை. இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை பயன்ப டுத்தி ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் முயன்ற காரணத்தினால்தான் 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடு க்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் கிடைத்தபோது அப்போதிருந்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தி ருந்தால் இந்த நாடு இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. 1948ஆம் ஆண்டில் ஒருசதமேனும் கடனாளியாக இல்லா திருந்த எமது நாடு மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டாகிலும் கடனை செலுத்த முடியாதளவிற்கு எமது பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வருமானத்தை கடனுக்குச் செலுத்தினால் ஒருசதமேனும் எஞ்சியிருக்காது. எமக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறினார்கள். எனவே நாடாளுமன்றில் 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்ததைப் போன்று அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம். கட்சிகளுக்கு இடையிலுள்ள இனவாதம் தகர்த்தெறியப்பட்டு ஒன்று சேர்ந்துள்ளன. நமது நாடு சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் ஆகின்ற போதிலும் இலங்கை பிரஜை என்ற அடையாளத்தை உறுதிசெய்ய முடியாதுபோயுள்ளது. இந்தியாவில் 25 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநில ங்களிலும் வெவ்வேறு மொழிகள் உள்ளன. ஆனாலும் நாட்டை ஒன்றிணைத்து ஒரு நபர் வெளியில் சென்று பெருமையாகக் கூறும் வண்ணம் அந்த நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” - என்றார்.

மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்

மைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக‌
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்

அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்

இலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.

அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டார்.இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்

போர்க்குற்றத்துக்கு எதிரான அனைத்துலக விசாரணையினை தாம் ஏற்கப்போவதில்லை என மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். அதற்கு பல நாடுகளையும் ஆதாரமாக காட்டியுள்ளார்

குறிப்பாக, ஈராக்கில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய படையினருக்கு ஆதரவான நிலை ப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கொண்டுள்ளதைப் போன்று, தாமும் இலங்கை படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஈராக்கிய மக்கள் சார்பு வழக்கறிஞர் குழுவொன்றால் பிரிட்டனின் படைச்சிப்பாய்கள் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தெரேசா மே தெரிவித்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, இவ்விடயத்தில் ஐ.நா. இலங்கை தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தக் குற்ற விசாரணைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கூறி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா

மஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில்  சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…