Super User

Super User

போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் - கோத்­த­பாய ராஜ­பக்ச பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த காலத்­தில்­தான் எமது உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இதனைத் தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளது.

எனவே, மகிந்­த­வை­யும், கோத்­த­பா­ய­வை­யும் உடன் கைது­செய்து கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை இந்த அரசு விசா­ர­ணை­யின் ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­க­வேண்­டும்.இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

காணா­மற்ேபா­ன­வர்­கள் அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பலர் அன்­றைய தினமே கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். மகிந்த அர­சில் இடம்­பெற்ற அனைத்­துக் கொலை­கள் மற்­றும் கடத்­தல்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னைப் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்சவே முன்­னெ­டுத்­துள்­ளார் என்று கொழும்­பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பில் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். எனவே, மகிந்­த­வுக்­கும் கோத்­த­பா­ய­வுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தற்­போ­தைய அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது?” என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

கைய­ளிக்­கப்­பட்டுக் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றும், அவர்­க­ளு­டைய உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மா­றும் வலி­யு­றுத்தி, வடக்கு மாகா­ணத்­தில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து செல்­கின்­றன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று 26 ஆவது நாளா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் நேற்று 22 ஆவது நாளா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நேற்று 10ஆவது நாளா­க­வும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்று 3ஆவது நாளா­க­வும் போராட்­டங்­கள் தொடர்ந்­தன.

இந்­தப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்ள உற­வி­னர்­கள் அனை­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா? இல்­லையா? இருந்­தால் எங்கு உள்­ள­னர்? இல்லை என்­றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­பதை அரசு வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை விடுத்­துள்­ள­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில், கடந்த சில நாள்­க­ளா­கக் கடும் மழை பெய்­த­போ­தும், மக்­கள் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட தக­ரக் கூடா­ரத்­துக்­குள் ஒதுங்கி இருந்து, உறு­தி­யு­டன் தமது அற­வ­ழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

ஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு

இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை 12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்­னே­குரோ, நோர்வே, மெஸ­டோ­னியா, பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. மேலும் இந்த பிரே­ர­ணை­யுடன் சம்­பந்­தப்­பட்ட நாடான இலங்­கையும் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது.

அந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது இம்­மு­றையும் வாக்­கெ­டுப்­பின்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அது­மட்­டு­மன்றி நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை இலங்­கையில் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரே­ணையை அமுல்­ப­டுத்த கால அவ­கா­சமும் வழங்­கி­யுள்­ளது.

இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி உள்­ளகப் பொறி­மு­றையின் மூலம் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­வ­கையில் இலங்கை பிரே­ர­ணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு

பாடசாலை மாண­வி­யு­டன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரி­வித்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் பொது­மக்­க­ளால் நையப் புடைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தச் சம்­ப­வம் நேற்று வவு­னியா வைர­வப்பு­ளி­யங் கு­ளத்­தில் நடந்­துள்­ளது.

குறித்த நபர் வைர­வப்பு­ளி­யங்­கு­ளம், 10ஆம் ஒழுங்கை புளி­யடி வீதி­யில் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்து கொண்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இவர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு முன் நின்று மாண­வி­க­ளு­டன் பகிடி வதை­யில் ஈடு­பட்டு வந்த நிலை­யில் நேற்று காலை 8.30 மணி­ய­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் தவறாக நடக்க முயன்­றார் என்று தெரி­விக்­கப்­பட்டே பொது­மக்­கள் அவரைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

அந்த நபர் இரு பிள்­ளை­க­ளின் தந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். விசா­ர­ணை ­யின் பின்­னர் அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு ­வர் என்று பொலி­ஸார் குறிப் பிட்­ட­னர்.

உள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்

உள்­ள­கப் பொறி­முறை இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டது. பன்­னாட்­டுப் பிர­சன்­னத் தையேமக்­க­ளும் கோரு­கின்­ற­னர். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். இவ்­வாறு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர் யஸ்­மின் சூகா தெரி­வித்­தார். பன்­னாட்டு ஊட­கத்­துக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

இலங்­கை­யில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காக ஐ.நாவின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் பான் கீமூ­னால் நிய­மிக்­கப்­பட்ட மூவ­ர­டங்­கிய குழு­வில் சூகா­வும் ஒரு­வ­ரா­வார். பன்­னாட்டு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ள­ரா­க­வும் இவர் விளங்­கு ­கி­றார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நிலை­மாற்­றுக்­கால நீதி தொடர்­பில் இலங்கை அரசு கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. இது அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­றது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­தின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­செ­யல்­கள் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சிறி­சேன அரசு தவ­றி­விட்­டது. காணா­மற்­போ­ன­வர்­கள் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைவு கடந்த வரு­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

ஆறு மாதங்­கள் கடந்த நிலை­யில் அந்த அலு­வ­ல­கத்தை இன்­ன­மும் ஏற்­ப­டுத்­த­வில்லை. பெரு­ம­ளவு சிங்­க ள­வர்­களை நிய­மிப்­ப­தற்கு அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வ­தற்குச் சிந்­திக்க வேண்­டும். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். பத்­தாண்டு கால வன்­மு­றை­கள் அரசு மற்­றும் அதன் அமைப்­பு­கள் மீதான அதி­ருப்­தி­யும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் தமி­ழர்­கள் மத்­தி­யில் உண்­டாக்­கி­யுள்­ளது.

பலர் உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்பு அவ­சி­யம் எனத் தெரி­வித்­துள்­ள­னர்.நம்­ப­கத்­தன்மை மிக்க உள்­ள­கப் பொறி­மு­றை­யென்­பது முரண்­பா­டு­க­ளைக் கொண்­டது. அவை அனைத்­தும் இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டன.

இலங்கை தொடர்­பான பன்­னாட்டு அணு­கு­முறை 180 பாகை­யில் திரும்­பி­யுள்­ளது. முன்­னர் ராஜ­பக்ச அர­சின் காலத்­தில் இலங்­கை­யில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­கள் குறித்து சகிப்­புத்­தன்­மை­யும் விரக்­தி­யும் காணப்­பட்­டன. தற்­போது இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­கான பொறுமை காணப்­ப­டு­கின்­றது.

நாட்­டில் நில­வும் சூழல் குறித்துக் கருத்துத் தெரி­விப்­ப­தென்­றால் தற்­போது அச்­ச­மற்ற சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு செயற்­ப­டு­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நம்­ப­கத்­தன்­மை­யுள்ள தலைமை காணப்­ப­டு­கின்­றது. இன்­ன­மும் திறன் போதாத நிலை காணப்­ப­டு­கின்­றது. தெற்­கில் நிலமை முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது.

முன்­னர் போர் நடை­பெற்ற பகு­தி­க­ளில் தமி­ழர்­கள் தொடர்ந்­தும் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பு­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழ­லில் வாழ்­கின்­ற­னர். இந்­தச் சூழ­லில் கண்­கா­ணிப்­பும் அச்­சு­றுத்­த­லும் நாளாந்த வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கக் காணப்­ப­டு­கின்­றது.

போர் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளின் பின்­னர் இத்­தனை தூரம் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழல் காணப்­ப­டு­வது ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது. இது படை­யி­னர் தொடர்ந்­தும் தண்­ட­னை­யின் பிடி­யி­லி­ருந்து விடு­விக்­கப் பட்ட நிலை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர் என்­ப­தை­யும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

சிறி­சேன அரசு பெரும் நம்­பிக்கை மாற்­றத்­துக்­கான நல்­லெண்­ணத்­து­ட­னேயே ஆட்­சிக்கு வந்­தது. இந்த அர­சுக்கு வாக்­க­ளித்த தமி­ழர்­க­ளி­டம் இந்த நம்­பிக்கை காணப்­பட்­டது. அதிர்ச்­சி­த­ரும் வகை­யில் இரண்டு வரு­டங்­க­ளாக எந்­த­வி­தச் செயற்­பா­டு­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. இலங்கை கடந்த காலத்­தி­லி­ருந்து ஏன் மாற்­ற­ம­டைய வேண்­டும் என்­ப­தற்­கான தெளி­வான நோக்­கத்தை ஏற்­ப­டுத்த அரசு தவ­றி­விட்­டது என்­றார்.

18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

வவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். 

இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். 

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.

1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.

திருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.

இதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, அம்னா (35) மற்றும் மீனோ (26) என்ற இரண்டு திருநங்கைகளையும் சாக்கில் கட்டிவைத்து, சிறைக் கைதிகள் சிலரைக் கொண்டு தடிகளால் அடிக்கச் செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறைச்சாலையிலேயே கொல்லப்பட்டனர்.

இது குறித்து திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. கைதான திருநங்கைகளுள் 11 பேர் மட்டுமே சுமார் ஒன்றரை இலட்சம் ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள ஏனைய திருநங்கைகளின் கதி என்ன ஆகுமோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளன இவ்வமைப்புகள்!

எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.


போர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தனது உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.

அதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.

குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.

அதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.

“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.

“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.

“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.

“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.

“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.

“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”

இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…