எமது நிலம் எமக்கே! கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்

மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வருவதனை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்து. முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை தி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் மக்கள் எதிர்ப்பினால் மைத்திரிபால வரவில்லை.

எனினும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும் மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள்தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன என்றும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…