நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்

தென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…